கொழும்பில் இருந்து சிங்கப்பூருக்கு 3 பகல் நேர விமான சேவை; பயணிகள் மகிழ்ச்சி!
2026 ஜனவரி 06 முதல் கொழும்பு மற்றும் சிங்கப்பூர் இடையே 3 பகல் நேர விமான சேவைகளை சிங்கப்பூர் எயார்லைன்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கிறது. இந்த முயற்சியானது .
இலங்கைக்கும் விமான நிறுவனத்தின் உலகளாவிய வலையமைப்பிற்கும் இடையிலான தொடர்பை மேலும் விரிவுபடுத்தச் செய்கிறது. அதேசமயம் இந்த புதிய பகல் நேர சேவையானது செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய நாட்களில் இடம்பெறும்.

புதிய பகல் நேர சேவை
இது ஏற்கனவே உள்ள விமானப் பயண கால அட்டவணையை வலுப்படுத்துவதுடன், இரு நகரங்களுக்கும் இடையே பயணிக்கும் வாடிக்கையாளர்களுக்கு மேலதிக நெகிழ்வுத் தன்மையையும், பயணத் தெரிவுகளையும் வழங்குகிறது.
இந்த புதிய சேவைகளின் சேர்க்கையின் மூலம், கொழும்பு மற்றும் சிங்கப்பூர் இடையிலான சிங்கப்பூர் எயார்லைன்ஸ் சேவைகள், வாரத்திற்கு பத்து (10) விமானங்களாக அதிகரிக்கும்.
இந்த விமான பயணங்கள் Airbus A350 மற்றும் Boeing 787-10 Dreamliner போன்ற சிங்கப்பூர் எயார்லைன்ஸின் அதிநவீன விமானங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும்.
இந்த புதிய சேவையில் பயணிக்கும் வாடிக்கையாளர்கள், விருது பெற்ற உயர்தர சேவையையும் மேம்பட்ட விமான பொழுதுபோக்கு அம்சங்களையும் எவ்வித இடையூறுகளுமின்றி அனுபவிக்க முடியும் எனவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.