தென்னிலங்கை உலுக்கிய படுகொலை தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்
தங்காலை - வித்தாரந்தெனிய பகுதியில், ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு, பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தின், பிரதான சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், குறித்த தாக்குதல் சம்பவத்தில் 15 பேர் ஈடுபட்டிருந்தமை தெரியவந்துள்ளாக குறிப்பிட்டார். அவர்களைக் கைது செய்வதற்காக, விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மதுபோதையில் இருந்த, குறித்த 15 பேர் கொண்ட குழுவினர், காவல்துறை கான்ஸ்டபிளின் வீட்டிற்கு சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குறித்த காவல்துறை உத்தியோகத்தரும், அவரது சகோதரரும் வீட்டில் வைத்து தாக்கப்பட்டனர். பின்னர், சந்தேகநபர்கள் காவல்துறை உத்தியோகத்தரை அருகிலுள்ள உணவகத்திற்கு அழைத்து சென்று தாக்குதல் நடத்தியதில் அவர் உயிரிழந்துள்ளாரென விசாரணைகளில் வெளிவந்துள்ளன.
சம்பவத்தில் காயமடைந்த அவரது சகோதரர் கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.