காதலிக்கு வீடியோ அழைப்பை எடுத்து உயிரை மாய்த்த இளைஞனால் அதிர்ச்சி
காதலியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இளைஞன் ஒருவன் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞன் ஒருவனே உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
காதலியுடன் முரண்பாடு
கொழும்பு புறக்கோட்டை பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் வேலை செய்து வந்த இளைஞன் நேற்று (24) இந்த முடிவை எடுத்துள்ளார்.
காதலிக்கு வீடியோ அழைப்பை எடுத்து தொடர்பு கொண்ட நிலையில் தனது உயிரை விட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த இளைஞனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை புறக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.