சிராந்தி ராஜபக்சவின் சகோதரன் நிசாந்த விக்ரமசிங்க கைது
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்ச கைது அச்சம் மத்தியில் சிராந்தி ராஜபக்சவின் சகோதரரும் சிறிலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவருமான நிசாந்த விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக மோட்டார் போக்குவரத்துத் துறையின் முன்னாள் ஆணையாளர் ஜெனரல் நிஷாந்த வீரசிங்க மற்றும் இருவர் செவ்வாய்கிழமை(1)இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டனர்.
மோட்டார் போக்குவரத்துத் துறையில் சட்டவிரோதமாக வாகனங்களைப் பதிவு செய்ததாக தொடரும் விசாரணையின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் செவ்வாய்கிழமை (1) கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
அதேவேளை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிசாந்த விக்ரமசிங்கவை ஜூலை 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (01) தடுப்பு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் நீதவான் தடுப்பு உத்தரவை பிறப்பித்தார்.
விமான கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் நிசாந்த கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.