உலக நாடுகளுக்கு முன் இலங்கைக்கு நேர்ந்த அவமான நிலை!

Srilanka MahindanandaAluthgamage Blacklist GayanthaKarunathilaka SLgovernmentbank
By Shankar Nov 02, 2021 04:30 AM GMT
Shankar

Shankar

Report

 கறுப்புப்பட்டியல் விவகாரம் இலங்கைக்குள்ளேயே மோசமான பதிவுகளை வைத்திருக்கும் தற்போதைய அரசாங்கம் இன்று வெளிநாடுகளுக்கு முன்னால் எமது நாட்டை அவமானப்படுத்தியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஊழல்களுக்கு நாட்டை சூதாடும் அரசாங்கம் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக (Gayantha Karunathilaka) தெரிவித்துள்ளார்.

கொழும்பு – எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்றைய தினம் (01)  திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

சீனாவின் தரமற்ற உரங்களை ஆய்வு செய்வதற்கு முன் கடன் கடிதங்களை வழங்க உத்தரவிட்டது. யார் என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அத்தகைய பொருளை நாட்டிற்குள் கொண்டு வருவதற்கு முன்,1999 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் தாவர தனிமைப்படுத்தல் நிலையத்தின் அனுமதி பெறப்பட வேண்டும். அரசாங்கம் ஊழல் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ளதால் முரண்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்துகிறது.

கடன் கடிதங்கள் வழங்குவதற்கு முன்னர் சீனக் கப்பல் புறப்பட்டுச் சென்றுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே ( Mahindananda Aluthgamage) கூறுகிறார். கடன் கடிதம் வழங்குவதற்கு முன்னர் இவற்றைச் சரிபார்க்க வேண்டும். தாவர தனிமைப்படுத்தல் ஆய்வு அறிக்கைகள் வருவதற்கு முன்னர் நிறுவனம் கடன் கடிதங்களை வழங்கியது ஏன் என ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு, இலங்கையிலுள்ள இரண்டு அரச உர நிறுவனங்களும் கடன் கடிதங்களை விரைவில் வழங்குமாறு கோரியுள்ளதாக மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்தார்.

இந்த இரண்டு உரக் கம்பனிகளும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் அமைச்சர் சசீந்திர ராஜபக்ச (Shasheendra Rajapaksa) ஆகியோரின் அமைச்சுக்களுக்குச் சொந்தமானவை என்பது எமக்குத் தெரியும். எல்.சி கடன் கடிதம் திறக்கப்பட்டபோது அதற்கு பொருந்தக்கூடிய முக்கிய நிபந்தனைகள் எதுவும் குறிப்பிடப்படாமல் வழங்கப்பட்டது.

இலங்கையின் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே ஒன்று சொல்கிறார். சீனா சார்பு மூன்றாம் தரப்பு ஒன்று இவற்றை ஆய்வு செய்ய விரும்புவதாக சீனா கூறுகிறது. மக்கள் வங்கி கோடீஸ்வரர்களின் பணத்தை விட கிராமப்புற அப்பாவி குழந்தைகள் சேமித்த பணத்திற்கு இணையாக உள்ளது.

தாவர தனிமைப்படுத்தல் அறிக்கை இல்லாமல் கடன் கடிதம் வழங்க அனுமதித்தவர்கள் அதனால் இலங்கையின் முன்னனி அரச வங்கியை கறுப்புப்பட்டியலில் இணைத்தவர்கள் மீது என்ன சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடு முழுவதும் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறது. மேலும் இது இலங்கை மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் வங்கியை பின்பட்டியலிட அனுமதித்தது யார்? இந்த பணத்தை சூதாட்டத்தில் பணயம் வைப்பது பெரும் குற்றம். நமது நாட்டின் அரச தலைவர் செயலணிகள், அரச தலைவர் ஆணைக்குழுக்கள் கடந்த இரண்டு வருடங்களாக குரங்கு போல் வீடுகளை கட்டி வருகின்றனர். அதுதான் எமது நாட்டில் உள்ளது.

எந்தவொரு திட்டமும் இல்லாமல் சகலதும் நடந்து முடிந்த பின்னர் இத்தகைய செயலணிகள் மூடி மறைக்கவே முற்பட்டுள்ளன. வாழ்க்கைச் செலவுக்கான அரச தலைவர் செயலணி அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காக மளிகைக் கடைக்குச் செல்லும் போது இந்த நாட்டு மக்கள் முன்னெப்போதையும் விட வாழ்க்கைச் செலவு பற்றி நன்றாக உணரத் தொடங்கியுள்ளனர்.

ஏனெனில் அவர்களில் பலர் என்ன நடந்தது என்பதைப் பார்க்க கூடவில்லை. இந்த ஆணைக்குழுவால் எதுவும் நடக்கவில்லை. இயற்கை வேளாண்மைக்கான அரச தலைவர் செயலணியால் என்ன நடந்தது என்பதை விவசாயிகள் இப்போது நன்கு உணர்ந்துள்ளனர் என்பதும் இந்த நாட்களில் இலங்கை முழுவதும் நடைபெறும் போராட்டங்களில் இருந்து தெளிவாகிறது. கொரோனா மீதான அரச தலைவர் செயலணி சிறப்பாகச் செயல்பட்டது, கிட்டத்தட்ட 15,000 பேர் உயிரிழந்தனர். அது மாத்திரமன்றி, இப்போது ஒரே நாடு ஒரே சட்டத்திற்கு ஒரே செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.

எல்லையற்ற அதிகாரங்கள் கொண்ட நிறைவேற்று அரச தலைவர், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு கொண்ட அரசாங்கம், நீதித்துறை, இராணுவம் மற்றும் அதிகாரத்துவம் என சகல வித அதிகாரங்களையும் வைத்துக் கொண்டு அரசாங்கம் தற்போது அரச தலைவர் செயலணிகளை உருவாக்கி வருகின்றது என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக (Gayantha Karunathilaka) மேலும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada, Saint-Eustache, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Pickering, Canada

03 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
நன்றி நவிலல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Hatton, சிட்னி, Australia

17 Nov, 2025
மரண அறிவித்தல்

கருங்காலி சோலை, Bümpliz, Switzerland

21 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, உடுவில்

21 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
கண்ணீர் அஞ்சலி

மட்டக்களப்பு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Aachen, Germany, Herzogenrath, Germany

20 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, சென்னை, India

19 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US