கோயில் கோபுரத்தின் நிழல் வீட்டின் மீது விழுந்தால் என்ன நிகழும் தெரியுமா?
மக்கள் ஒவ்வொருவரும் தங்களது மன நிம்மதிக்காக அதிகம் நாடிச்செல்வது கோயிலை தான்.
கோயில் இல்லா ஊரிலே குடியிருக்காதே என்பது பழமொழி. ஒவ்வொரு ஊரு நதி மற்றும் ஆற்றங்கரை அதன் அருகே மரம் என சூழ்ந்திருக்கும். அப்படிப்பட்ட ஊர்களில் வசிப்பவர்களால் சில சிறப்புமிக்க கோயில்கள் உருவாக்கப்பட்டு தனிப்பெருமையே அதனால் உருவாகியிருக்கும்.
இப்படியான புனிதமான கோயிலினால் ஏராளமான நன்மைகளை கொண்டது தான் கோயில். அப்படிப்பட்ட கோயிலின் கோபுரத்தின் நிழல் வீட்டின் மீது விழுந்தால் சில பிரச்சனைகள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. கோயில் கோபுர நிழல் வீட்டின் மீது விழுவதால் அந்த வீட்டின் வம்ச விருத்தி பாதிக்கும். அதுமட்டுமல்லாமல் கோபுரத்தின் நேர் எதிர்புறத்திலும், கோபுரத்தின் பக்கத்தில் இருபுறமும் வீடு கட்டி குடியிருக்கக்கூடாது.
ஏனெனில் கோயிலை சுற்றிலும் அதிகளவிலான தெய்வ சக்தி பரவி இருக்கும் . அந்த சக்தி உட்புகுந்து வெளிப்பாட்டுக் கொண்டே இருக்கும்.
அதனை தடை செய்யும் விதமாக நாம் செயல்பாடக் கூடாது.