ஆபாச வீடியோ மூலம் மிரட்டல் ; நண்பரின் மனைவி மீது பாலியல் வன்கொடுமை
இந்தியாவில் கர்நாடகா மாநிலம் பெங்களூரு கோவிந்தாபுரா பொலிஸார் எல்லைக்குட்பட்ட பகுதியில், பீகாரை சேர்ந்த ஒரு தையல்காரரின் மனைவி மீது ஜஹாங்கீர் பாலியல் வன்கொடுமை செய்து, அதனை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸார் தெரிவித்ததாவது, ஜஹாங்கீர் அந்த வீடியோவைக் குற்றச்செயலுக்கு பயன்படுத்தி, பெண்ணை மிரட்டி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.

மேலும், அவர் "உல்லாசத்துக்கு வரவில்லை என்றால் ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும்; இல்லையெனில் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன்" என்று மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்த பெண், பெங்களூருவில் கோவிந்தாபுரா பொலிஸாரிடம் புகார் அளித்து, ஜஹாங்கீருக்கு எதிராக பலாத்காரம் செய்தல், பணம் கேட்டு மிரட்டல் மற்றும் ஆபாச வீடியோ மூலம் துஷ்பிரயோகம் செய்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது, ஜஹாங்கீர் தலைமறைவாக உள்ளார், பொலிஸார் வலைவீசி அவரைக் தேடி வருகின்றனர்.