சீன நிறுவனத்திற்கு ஆபாச காணொளி விற்பனை; வங்கிக் கணக்குகளில் டொலர்களில் வரவு ; வெளியான தகவல்
இணையம் ஊடாக சீன நிறுவனமொன்றுக்கு நேரடி ஆபாசக் காணொளிகள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை பிணையில் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் முன்னதாக பிலியந்தலை பகுதியில் இரண்டு தம்பதியினரை பொலிஸார் கைது செய்தனர்.
வங்கிக் கணக்குகளில் டொலர்களில் வரவு
பிலியந்தலை - படகெத்தர, கொங்கஹவத்த பகுதியில் உள்ள வீடொன்றில் இவ்வாறான காணொளிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட சீன நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சீன நிறுவனத்தினால் சந்தேகநபர்களின் வங்கிக் கணக்குகளில் டொலர்களில் வரவு வைக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வாரத்தில் ஒரு இலட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களைக் கைது செய்யும் போது , வீட்டில் கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல உபகரணங்களை மீட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரிடமிருந்து ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவத்தில் கைதானவர்கள் புலத்சிங்கள மற்றும் கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 22, 23, 26 மற்றும் 27 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
அதேவேளை செயற்பாடுகளுக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட வீடு, மாதாந்தம் 25,000 ரூபாய் வாடகை அடிப்படையில் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்களை ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.