ரவியின் கருணாநாயக்க வீட்டில் தொடரும் இரகசிய சந்திப்புகள்! கொழும்பு அரசியலில் பரபரப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க வீட்டில் இரகசிய கூட்டங்கள் இடம்பெற்று வருவதாக அரசியல் வட்டர தகவல்கள் கூறுகின்றன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தைப் பலப்படுத்தும் நோக்கில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை வளைத்துப் போட திரைமறைவில் வேலைகள இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரகசிய பேச்சுக்கள்
இதற்காக அக்கட்சி உறுப்பினர்கள் பலரை இரகசியமாகச் சந்தித்துப் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன என்று அறியமுடிகின்றது. ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றில் நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் சஜித் அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ரணில் விக்கிரமசிங்ககவுக்கு வாக்களித்திருந்தனர்.
இந்நிலையில் அவர்களுடனும் அவர்களின் ஏற்பாட்டில் அக்கட்சியின் ஏனைய சில உறுப்பினர்களுடனும் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்கட்சியின் முக்கியஸ்தரான ராஜித சேனாரத்னவும் ரணிலுடன் இணையவுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.
இவர்களுக்கு அப்பால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன். அவருடன் சேர்த்து அவரின் கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் முற்றாக இணைப்பதற்கான நகர்வு ஒன்றும் முட்டுக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
அத்துடன் , இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான். அவரும் அரசுக்கான ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசில் ஜீவன் அமைச்சுப் பதவி பெற்றிருந்தமை நினைவில் கொள்ளத்தக்கது.
இணைகின்றவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்காகவே ஜனாதிபதி புதிய அமைச்சரவையை நியமிக்காமல் இழுத்தடித்து வருகின்றார் என்று ஜனாதிபதி வட்டாரம் தெரிவிக்கின்றது.