சைவ சிறுத்தையா நீங்க.... திருமாவை கேலி செய்த பிரபாகரன்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல். திருமாவளவன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உரையில் , விடுதலைப்புலிகளின் தலைவர் தன்னை சைவ சிறுத்தையா என கேட்டதாக கூறிய காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அம்பேத்கர் திடலில் நேற்றியதினம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் சர்வதேச இனப்படுகொலை நாள் கூட்டத்தில் ஆற்றிய உரையின் போதே திருமா இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் தெரிவிக்கையில்,

சைவ சிறுத்தையா நீங்க.....
ஒரு முறை விடுதலை புலிகளின் தலைவர் பிரபரனுடன் தான் உணவு உட்கொண்டபோது, மாமிசம் உணவுகள் எல்லோரிற்கும் வைப்பட்டதாகவும், எனினும் தனது இலையில் மாமிச உணவு இல்லாததை கண்ட பிரபாகரன் அவரது உண்வில் இருந்த சிக்கின் உணவை தனது இலைக்கு வைத்த போது, தான் மாமிசம் உண்பதில்லை என விடுத்தலை புலிகளின் தலைவருக்கு கூறியநிலையில், பிரபாகரன் , திருமாவை சைவ சிறுத்தையா என கேலி பேசியதாகவும், தொல். திருமாவளவன், நேற்றையதினம் (17) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூறியுள்ளார்.
இன்று அம்பேத்கர் திடலில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் சர்வதேச இனப்படுகொலை நாள் கூட்டத்தில் வீரவணக்கம் செலுத்தி ஆற்றிய உரை... pic.twitter.com/49YMSgZmvu
— Thol. Thirumavalavan (@thirumaofficial) May 17, 2026
முள்ளிவாய்க்கால் போரின் பின் இலங்க்கை வந்த தொல். திருமாவளவன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்திருந்தமை தமிழர் மனங்களில் பல்வேறு சந்தேககங்களை எழுப்பி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை நாம் தமிழர் ஒருகிணைப்பாளர் சீமான் , விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் விருந்தோம்பல் கதைகள் பல கூறி வந்த நிலையில், தற்போது தொல். திருமாவளவனும், அந்த வரிசையில் இணைந்துள்ளாரா என சமூக வலைத்தளவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.