கொழும்பில் பொலிஸார் மீது கத்திக்குத்து தாக்குதல்; இருவர் மருத்துவமனையில்
கொழும்பு − முகத்துவாரம் − எலிஹவுஸ் பார்க் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்களை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடமைகளுக்காக சென்ற பொலிஸார் மீது நேற்றைய தினம் சந்தேகநபர் கத்தியால் குத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இருவர் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர் முகத்துவாரம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.