பிரித்தானியாவில் கத்திக்குத்து: உயிரிழந்த எம்.பி! அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
பிரித்தானியாவில் தொகுதி மக்களுடனான கூட்டத்தின் இனந்தெரியாத நபரின் கத்திக்குத்து தாக்குதலிற்குள்ளாகி கன்சர்வேடிங் எம்.பி சர் டேவிட் அமெஸ் (David Amess) சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பிரித்தானிய அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை (15) கிழக்கு லண்டனின் கடற்கரை நகரமான Leigh-on-Sea-யில் உள்ள Belfairs Methodist தேவாலயத்தில் கன்சர்வேடிவ் கட்சி எசெக்ஸில் உள்ள Southend West தொகுதி எம்.பி-யான சர் டேவிட் அமெஸ், கத்தியால் குத்திகொலை செய்யப்பட்டுள்ளார்.
எம்பி சர் டேவிட் அமெஸ் (David Amess) வழக்கம் போல இன்று Belfairs Methodist தேவாலயத்தில் தொகுதி மக்களை சந்தித்து கொண்டிருந்த போது திடீரென கூட்டத்துக்குள் நுழைந்த நபர், கத்தியால் அவரை பலமுறை குத்தியாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த 69 வயதான சர் டேவிட் அமெஸ்-க்கு அவசரகிசிச்சை பிரிவினர் சிகிச்சை வழங்கிய போதிலும் அவரை காப்பாற்ற முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சர் டேவிட் அமெஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் 25 வயது இளைஞர் ஒருவர் பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பிரித்தானியாவில் 5 வருடங்களில் கொலைப்பட்ட 2வது நாடாளுமன்ற உறுப்பினர் சர் டேவிட் அமெஸ் என்பது குறிப்படத்தக்கது. இதற்கு முன்னர் 2016 ஆண்டு தொழில்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோகொக்ஸ் கொலைப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.