பாடசாலை மாணவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் பலி
குருநாகலை (Kurunrgala) - கல்கமுவ பிரதேசத்தில் 3 பாடசாலை மாணவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் ஒரு மாணவன் உயிரிழந்துள்ளார்.
கல்கமுவ பகுதியின் புனரமைக்கப்பட்ட ரயில் பாதையின் அருகில் உள்ள வீதியில் சென்று கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், காயமடைந்த மற்றைய இரு மாணவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள்
அத்துடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |