இங்கிலாந்து புதிய அரசாங்கத்தில் 3 இந்தியர்களுக்கு அமைச்சர் பதவி!
இங்கிலாந்து பிரதமராக எண்டி பர்ன்ஹாம் (prime minister andy burnham) பொறுப்பேற்றுள்ளதைத் தொடர்ந்து, இதன் ஒருபகுதியாக, தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த 3 இந்திய வம்சாவளி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கிய அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அவர்களில் இங்கிலாந்து நாட்டின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) துறை அமைச்சராக கனிஷ்கா நாராயண் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைத் தமிழர் வம்சாவளி உமா குமரன்
இவர் வர்த்தகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்களுடன் இணைந்து, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அது தொடர்பான நிர்வாகப் பணிகளைக் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமத்துவத் துறை அமைச்சராக சத்வீர் கவுர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்தல், பாலின சமத்துவத்தை உறுதி செய்தல் மற்றும் சமூகச் சமத்துவம் சார்ந்த முக்கியப் பணிகளை மேற்கொள்வார்.

தொழிலாளர் கட்சியின் உதவிக் கட்டுப்பாட்டு அதிகாரியாக ஹர்பிரீத் உப்பல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆளும்கட்சியின் விதிமுறைகளை ஒருங்கிணைத்து, பாராளுமன்ற உறுப்பினர்களைச் சரியாகச் வழிநடத்தும் பொறுப்புகளை செய்வாரென கூறப்படுகின்றது.
இந் நிலையில் இங்கிலாந்து அரசாங்கத்தின் முக்கியத் துறைகளிலும், வளர்ந்து வரும் நவீனத் தொழில்நுட்பத் துறையான AI அமைச்சின் முதல் அமைச்சராகவும் இந்திய வம்சாவளியினர் பொறுப்பேற்றிருப்பது உலகளவில் பெரும் வரவேற்பையும் கவனத்தையும் பெற்றுள்ளது.
அதேவேளை இலங்கைத் தமிழர் வம்சாவளியைச் சேர்ந்தவரும், வெளியுறவுத் துறையில் இளைய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளவருமான இந்து மதத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் ஆகியோருடன் சேர்த்து, தற்போது அமைச்சரவையின் முன்னவரிசையில் (front bench) இரண்டு இந்து மற்றும் இரண்டு சீக்கிய அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.