தீபாவளி காலத்தில் சனி பகவானின் வக்ர பெயர்ச்சி ; இந்த ராசிகளுக்கு பொற்காலம்
ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்களின் இயக்கங்கள் ஒவ்வொரு ராசியிலும் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், 2025ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை காலத்தில், நீதியின் கடவுளாக கருதப்படும் சனி பகவான் வக்ர நிலையில் சஞ்சரிக்கிறார்.
இந்த வக்ர பெயர்ச்சி சுமார் 43 நாட்கள் நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சனி பகவானின் இந்த வக்ர நிலை, அனைத்து ராசிக்காரர்களுக்கும் பொதுவான தாக்கங்களை ஏற்படுத்தும்.
அபரிமிதமான பலன் பெறும் ராசிக்காரர்கள்
குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்கள், தொழில் முன்னேற்றம் மற்றும் குடும்ப மகிழ்ச்சியை வாரி வழங்கும் என ஜோதிட வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
ரிஷபம் (Taurus): ரிஷப ராசிக்காரர்களுக்கு, சனி பகவான் பதினொன்றாம் வீட்டில் சஞ்சரிப்பதால், எண்ணற்ற நன்மைகள் விளையும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நிலவி வந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து, அமைதி நிலவும். உறவினர்களின் நிதி நிலைமையும் மேம்படும்.
கடகம் (Cancer): கடக ராசிக்காரர்களுக்கு இந்த சனியின் வக்ர சஞ்சாரம் ஒரு பொற்காலமாக அமைய போகிறது. எதிர்பாராத பண வரவு உண்டாகும். நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த நிதி ஆதாயங்கள் கைக்கு வந்து சேரும். பங்கு சந்தை போன்ற முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும்.
மீனம் (Pisces): மீன ராசிக்காரர்களுக்கு இந்த வக்ர சஞ்சாரம் ஒரு நல்ல தொடக்கமாக அமையவுள்ளது. சிறப்பான பண வரவு இருக்கும். இதன் மூலம் உங்களின் நிலை வலுப்பெறும். வாழ்க்கையில் அமைதியும், ஒழுங்கும் பேணப்படும்.