திடீரென மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்திய ரஷ்யா! அதிர்ச்சி காணொளி
ரஷ்ய துருப்புக்கள், தங்கள் நாட்டு பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக குற்றம்சாட்டிய உக்ரைன் அவை தொடர்பான காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவின் பிடியில் இருக்கும் உக்ரைனின் கெர்சன் நகரில் அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்குவந்த ரஷ்ய துருப்புக்கள், திடீரென கையெறி புகைக்குண்டுகளை வீசியதாக சொல்லப்படுகிறது.
In Kherson, Russian war criminals opened fire at unarmed people who peacefully protested against invaders. You can see a wounded pensioner. This is the ugly face of Russia, a disgrace to humankind. We must stop Russia! Sanction them, isolate them, hold war criminals to account. pic.twitter.com/WeItSykD3q
— Dmytro Kuleba (@DmytroKuleba) March 21, 2022
தொடர்ந்து அங்கு துப்பாக்கி சூட்டும் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த திடீர் தாக்குதலில் ஒருவருக்கு காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தாக்குதல் தெடர்பான காணொளியை வெளியிட்டிருக்கும் உக்ரைன் அரசு, ரஷ்ய துருப்புக்கள் பொதுமக்களிடம் வன்முறையில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
முன்னதாக நேற்றைய தினம், `ரஷ்யா விடுக்கும் இறுதி எச்சரிக்கை என்ற மிரட்டல்களை உக்ரைன் அரசு பணியாது’ என அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.