ரஷ்யாவின் டாங்கிகளை சுட்டு வீழ்த்திய உக்ரைன் பெண்கள் படை! பகீர் கானொளிகள்
உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்துள்ள ரஷ்ய துருப்புகளின் டாங்கிகளை ஓட ஓட சுட்டு வீழ்த்தி உக்ரைன் பெண்கள் பாதுகாப்பு படையினர் மிரட்டியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா இன்று 16வது நாளாக தனது தாக்குதலை தொடுத்து வரும் நிலையில், உக்ரைன் படை வீரர்களின் தொடர் தடுப்பு தாக்குதலால் ரஷ்ய துருப்புகளின் முன்நகர்வு பெரும்பாலான இடங்களில் நிதானமடைந்துள்ளது.
இதேவேளை ரஷ்ய போருக்கு உக்ரைனில் எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், ஆண்கள் - பெண்கள் மற்றும் முதியவர்கள் என அதிகமானோர் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்து ரஷ்யப் படைகளுக்கு எதிராக தமது போராடி வருகின்றனர்.
இதன் காரணமாக உக்ரைனில் நுழைந்துள்ள ரஷ்யப் படைகளில் முன்னகர்வு தடுத்து நிறுத்தப்பட்டு, அதிகமான இடங்களில் தடுப்புத்தாக்குதலையே தற்போது ரஷ்யா நடத்திவருகிறது.
இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்வின் போரோடியங்கா பகுதிக்குள் நுழைய முயன்ற ரஷ்ய துருப்புகளின் டாங்கிகளை உக்ரைன் பெண் பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியுள்ளது.
??? Військово-морські сили ЗСУ мають чим порадувати цього ранку #stoprussia pic.twitter.com/KadNG0XuPM
— Ukrinform (@UKRINFORM) March 10, 2022
இது தொடர்பாக காணொளி ஆதாரக்காட்சியை உக்ரைன் பாதுகாப்பு துறை அவர்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியீட்டு, பீரங்கிகள் மூலம் உக்ரைனின் தாடிவைத்த பெண்கள், எதிரி நாட்டின் டாங்கிகளை நகைவேலைப்பாடு செய்வதுபோல் சுட்டுவீழ்த்தியுள்ளனர் என்ற கருத்தையும் தெரிவித்துள்ளது.
இதைபோன்று நேற்று அதிகாலை மற்றொரு பகுதிக்குள் நுழைந்த ரஷ்ய துருப்புகளின் டாங்கியையும் உக்ரைன் பாதுகாப்பு படையினர் ட்ரோன் ஏவுகணை தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.