உக்ரேன் மீது ரஷ்யாவின் கொடூர தாக்குதல்; பரிதாபமாக உயிரிழந்த பொதுமக்கள்
உக்ரேனின் ஒடேசா நகரத்தில் குடியிருப்பு கட்டிடம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 21 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதனால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. உக்ரேன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலானது சுமார் 5 மாதங்களை எட்டி விட்ட நிலையில் உக்ரேனின் பல நகரங்களை கைப்பற்றிய ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி கொண்டே வருகிறது.
மறுபுறம் மேற்கத்திய நாடுகள் உக்ரேனுக்கு ஆயுத உதவி, நிதி உதவி போன்ற பல்வேறு உதவிகளை அளித்து வருகின்றன. இந்நிலையில், உக்ரேனின் ஒடேசா நகரத்தில் குடியிருப்பு கட்டிடம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கருங்கடல் பகுதியில் உள்ள ஸ்னேக் தீவில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறிய மறுநாளே ரஷ்யா இந்த ஏவுகணை தாக்குதலை ஒடேசா நகரம் மீது நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.