பயங்கரமான தவறை செய்த ரஷ்யா: போரில் நிச்சயம் தோல்வியடையும் - கனடா பிரதமர்
உக்ரைன் மீது கொடூர தாக்குதலை நடத்தி கடும் சேதங்களை ஏற்படுத்தி வரும் ரஷ்யா போரில் தோல்வி அடையும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்ய துருப்புகள் 15-வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதில், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் கொல்லப்பட்டுள்ளனர். போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து பாதுகாப்பு தேடி வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில், உக்ரைன் போரில் ரஷ்யா தோல்வி அடையும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜஸ்டின் ட்ரூடோ இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தது,
#UPDATE Canadian Prime Minister Justin Trudeau on Thursday said Russian President Vladimir Putin will "lose" the war in Ukraine that he began by invading Ukraine pic.twitter.com/eWzSmZ3sn6
— AFP News Agency (@AFP) March 10, 2022
“ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) உக்ரைனை ஆக்கிரமிப்பதற்காக போரை தொடங்கி பயங்கரமான தவறை செய்துள்ளார்.
இந்த போரில் அவர் தோல்வி அடைவார். தங்கள் பிரதேசத்தை பாதுகாக்க உக்ரைனிய மக்களின் மூர்க்கத்தனமும் வலிமையும் உறுதியும் நம் அனைவரையும் ஊக்குவிக்கிறது” என்றார்.