கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் கிண்ணியாவில் படகோட்டப் போட்டி
கிழக்கு ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டிலான பொங்கல் நிகழ்வின் மற்றுமோர் அம்சமாக கிண்ணியாவில் 55 படகுகளுடன் 110 போட்டியாளர்கள் பங்கேற்ற படகோட்டப் போட்டி இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் டாக்டர் வெங்கடேஸ்வரன் பங்கேற்றதுடன், படகோட்டப் போட்டியை ஆளுநர் செந்தில் தொண்டமான், டாக்டர் வெங்கடேஸ்வரன் ஆகிய இருவரும் பச்சைக்கொடி அசைத்து ஆரம்பித்து வைத்தனர்.
இப்போட்டியை பார்ப்பதற்காக ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் திரண்டிருந்தனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு முதல் பரிசாக 100,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 50,000 ரூபாவும், மூன்றாம் பரிசாக 25,000 ரூபாயும் வழங்கி வைக்கப்பட்டது.