வெளிநாட்டு தூதுவரின் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள்!
கொழும்பில் உள்ள தாய்லாந்து துாதுவரின் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளை கும்பல் பொருட்கள் மற்றும் 3 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
கொழும்பு – ஃப்ளவர் வீதியிலுள்ள தாய்லாந்து தூதுவர் போஜ் ஹன்போலின் வாசஸ்தலத்தில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.
இந்த திருட்டுச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கும் காலை 7 மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.
பெறுமதியான பொருட்கள் திருட்டு
கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களில் கையடக்கத் தொலைபேசி, நினைவுப் பரிசு, தாய்லாந்து நாணயம் மற்றும் இலங்கை ரூபா என்பன உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வாசஸ்தலத்துக்கு வெளியில் நின்றிருந்த போதும், மற்றொரு தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் வீட்டிற்குள் இருந்த போதிலும் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இதுவரை சந்தேநபர்கள் எவரும் கைதுசெய்யப்படாத நிலையில், கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.