அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் அரசிடம் கோரிக்கை
சந்தையில் கிரி சம்பா அரிசி பற்றாக்குறை இருப்பதாக நுகர்வோர் புகார் தெரிவித்துள்ளனர்.
புறக்கோட்டை அரிசி மொத்த விற்பனையாளர்கள், அரிசி உற்பத்தியாளர்கள் கிரி சம்பா அரிசியை 260 ரூ கட்டுப்பாட்டு விலையை விட அதிகமான விலையில் வழங்குவதால், அதை விற்பனை செய்வதைத் தவிர்த்து வருவதாகக் கூறுகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில், சம்பா மற்றும் கிரி சம்பா அரிசிக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை நீக்குமாறு அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும், பெரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசி பற்றாக்குறையை உருவாக்கி இலாபம் ஈட்ட முயற்சிப்பதால், அரிசியின் அதிகபட்ச சில்லறை விலையை நீக்க எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று இலங்கை சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், அரசாங்கம் உடனடியாக தலையிட்டு இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகளை வழங்க வேண்டும் என்று தேசிய விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது