இனந்தெரியாத ஆணொருவரின் சடலமொன்று மீட்பு!
புத்தளம் பிட்ட ரவும் வீதியில் இனந்தெரியாத ஆணொருவரின் சடலமொன்று இன்று பிற்பகல் மீட்கப்பட்டது.
இவ்வாறு ஆணொருவரின் சடலமொன்று காணப்படுவதாக அப்பகுதியிலுள்ள மக்கள் பொலிஸாருக்குத் தகவலை வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதிக்கு பொலிஸார் சென்று சடலத்தை பார்வையிட்டுள்ளனர். இதன்போது புத்தளம் கற்பிட்டி திடீர் மரண விசாரணை அதிகாரியிடம் குறித்த சம்பவம் தொடர்பில் தகவலை வழங்கியுள்ளனர்.
அதன்படி திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தைப் பார்வையிட்டதுடன் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவில்லையென தெரிவித்துள்ளார். இந்த நிலையில் குறித்த சடலம் தொடர்பில் புத்தளம் நீதவானுக்கு அறிக்கை சமர்பிக்க உள்ளதாகவும் திடீர் மரண விசாரணை அதிகாரி இதன்போது தெரிவித்தார்.
மேலும் குறித்த சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.