சுரேஷ் சலே தொடர்பில் மனைவி முன்வைத்த கோரிக்கை
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளரான சுரேஷ் சலேவை தினமும் சந்திக்க அனுமதி வழங்குமாறு கோரி அவரது மனைவி மற்றும் சட்டத்தரணி ஆகியோர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்காக அவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு இரண்டு தனித்தனி கடிதங்களை அனுப்பியுள்ளனர்.

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலிலிருந்து தொடர்ந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.