திருகோணாமலை மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை; மீனவர்கள் செல்ல வேண்டாம்
நாட்டில் நிலவுகின்ற தாழ் அமுக்கம் காரணமாக திருகோணாமலை மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த தாழ் அமுக்கம் காரணமாக , மூதூர் பிரதேசத்தின் கரையோர பகுதிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
கடல் அலையின் கடும் வீரியம் காரணமாக, கரையோரங்களில் அமைந்திருந்த மீன்வாடிகள் மற்றும் கருவாடு உலர்த்த பயன்படுத்தப்பட்ட தட்டிகள் கடல் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதோடு கடல் அரிப்பு காரணமாக கரையோரத்தில் இருந்த மரங்கள் வேர் சாய்ந்து கடலுக்குள் விழுந்துள்ளன. எனவே , மறு அறிவித்தல் வழங்கப்படும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு உயர்த்தி வைத்துள்ளனர். இந்நிலையில் இது ஒவ்வொரு வருடமும் இதேபோன்று இடம்பெற்று வருவவதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

