போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த தயார் - மஹிந்த ராஜபக்ஷ
இலங்கையில் அதிபரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர, ஆளும் கட்சியைச் சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். அதனையடுத்து, அனைத்துக் கட்சிகளின் பங்களிப்புடன் புதிய அமைச்சரவையை அமைக்குமாறு அதி காரி கோட்டபாய ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் அதை ஏற்கவில்லை.
ஆளும் கட்சியைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் உட்பட 42 எம்.பி.க்கள் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக அவர் அறிவித்தார். இதனிடையே கடும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் கடும் தட்டுப்பாடு போன்றவற்றால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாட்டின் நிலைமைக்கு அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கையே காரணம் என குற்றம் சுமத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராஜபக்ஷ அரசு ராஜினாமா செய்ய வேண்டும், ஒட்டுமொத்த ராஜபக்சே குடும்பமும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஏராளமான இளைஞர்கள் அதிபரின் அலுவலக நுழைவாயிலை 5வது நாளாக முற்றுகையிட்டனர்.
மக்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அதிருப்தி எம்.பி.க்களுடன் அதிபா கோத்தபாய ராஜபக்ச ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
அப்போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், போராட்டங்களை ஒடுக்க புதிய அமைச்சரவையை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் எம்பிக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேசுவதற்குத் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.