ரணிலின் ஜனாதிபதி கனவு கானல் நீராகிறது! அடுத்த அதிபர் இவரா?
பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe), கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) பதவி விலகினால், ஜனாதிபதியாகலாம் என ஒரு நினைப்பு.
ராஜபக்சவினரை காப்பாற்றி, நல்ல பெயர் எடுத்து பிரதமராகி, கோட்டாபய அழுத்தங்கள் அதிகரித்து விட்டு விட்டு போனால், ரணில்தான் ஜனாதிபதி. அதை மோப்பம் பிடித்த மொட்டு கட்சியினர், தம் கட்சியில் ஒருவரை ஜனாதிபதியாக்க முயன்றனர்.
மொட்டு கட்சியினரை விட, ராஜபக்சவினரது வியாபாரங்களின் பினாமியான தம்மிக்க பெரேராவை (Dhammika Perera) உள்ளே கொண்டு வந்ததே, மொட்டு கட்சியினரை விட தம்மிக்க மேல் உள்ள நம்பிக்கையால்தான்.
தம்மிக்க பெரேரா, ரணில் நிதியமைச்சிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என ஒரு போடு போட்டுள்ளார். ஏற்கனவே மத்திய வங்கி ஆளுனருக்கும், ரணிலுக்கும் ஆகாது. கோட்டாபயவின் பிடிவாதத்தால் மத்திய வங்கி ஆளுனர் நந்தலால் தொடர முடிந்துள்ளது.
3 வேளையும் சாப்பிடக் கொடுப்பதே எனது எண்ணம் என சொன்ன ரணில், பின்னர் பாடத் தொடங்கியதெல்லாம் பஞ்ச பாட்டு வானிலை அறிக்கை. ரணிலால் டொலரை கொண்டு வந்து கொட்டலாம் என்ற கதையெல்லாம் கந்தலாகி, கடதாசி திட்டங்களாகி ஒன்றுக்கும் லாயக்கற்ற பிரதமர் எனும் நிலைக்கு தள்ளிவிட்டது.
மக்களுக்கு சைபர்தான் எனத் தெரிந்து விட்டது. இப்போது தம்மிக்க, நிதியமைச்சை கைப்பற்ற முயல்கிறார். அது கிடைத்ததும் பிரதமர் பதவியையும் ரணிலிடமிருந்து பறிக்க திட்டமிடுவதாக தெரிகிறது.
இது மத்திய வங்கி பிரச்சனை முதல் தொடங்கிய விடயம்தான். முதலில் நிதியமைச்சு, அடுத்து பிரதமர் பதவி என ரணிலின் பதவிகள் பறிக்கப்படும். அவை தம்மிக்கவுக்கு போகலாம்.
மக்கள் போராட்டம் பலமாகி, இந்த கோட்டாபய அரசு போகாவிட்டால், அடுத்த பிரதமராகி, ஜனாதிபதியாகும் வாய்ப்பு தம்மிக்கவுக்கு உண்டு.
எல்லாம் காலிமுகத்திடல் கடவுளர் கையில்தான் உள்ளது. என முகநூலில் ஜீவன் பிரசாத் என்பவர் குறித்த கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.