எதிர்காலத்தில் தமக்கு படுதோல்வி உறுதி என்பதை ஏற்ற ராஜபக்ஷ!
விமர்சனம் என்பதை ராஜபக்ஷ குடும்பத்திற்கு சாதாரணமாகிவிட்டது என விவசாயத்துறை அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு அதன் பின்பு ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதனை தெரிவித்தார். மேலும் விவசாயத்துடன் தொடர்பில்லாதவர்களும், சேதன பசளை தொடர்பில் தெளிவில்லாதவர்களும் தான் பெரும்பாலான போராட்டங்களில் ஈடுப்படுகிறார்கள்.
சிறந்த திட்டங்களை செயற்படுத்தும்போது தோல்விகள் ஏற்படுவது சாதாரணம் தான், தேர்தல் வெற்றியைக் இலக்காக கொண்டு ஜனாதிபதி கோட்டாபய அவர்கள் இந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை.
நாளைய தினத்தில் தேர்தல் இடம்பெற்றால் படுதோல்வி அடைவது நிச்சயம். ஆனால் அதற்காக மக்கள் விஷத்தை உண்டு இறந்தாலும் பரவாயில்லை என ஜனாதிபதி கருதவில்லை. மக்களின் நலனில் கருத்தாக தீர்மானம் மேற்கொள்வதற்கு அரச தலைவர்கள் குறைவாக உள்ளனர். சேதன பசளையை கொண்டு பெரும்பாலான விவசாயிகள் நெற்செய்கையிலும் ,மரக்கறி விவசாயத்திலும் ஈடுப்படுகிறார்கள். சேதன பசளை பயன்படுத்தி விவசாய நடவடிக்கையினை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளார்கள்.