இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி!
Power cut Sri Lanka
Government Of Sri Lanka
Ceylon Electricity Board
By Shankar
ஆறு மாத காலத்திற்கு 100 மெகா வோல்ட் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்றைய தினம் (17-08-2023) அனுமதி வழங்கியுள்ளது.
இந்த அங்கீகாரம் 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தின் 43 ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, மூன்று முக்கிய நிபந்தனைகளின் கீழ் 2023 ஆண்டு ஒகஸ்ட் மாதம் 18-08-2023ஆம் திகதி முதல் ஆறு மாத காலத்திற்கு மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
குறித்த மூன்று நிபந்தனைகள் பின்வருமாறு,
- கொள்முதல் தகுதியின் அடிப்படையில் குறித்த மின்சாரம் கொள்வனவு செய்யப்பட வேண்டும் என்பதோடு, மின்சார கொள்முதல் ஒப்பந்த காலத்தின் முடிவில் கொள்முதல் பற்றிய சுயாதீன தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
- கொத்மலை பொல்பிட்டிய 220 kv மின் அமைப்பை 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் செயற்படுத்த வேண்டும்.
- இந்த மின்சார கொள்முதல் குறைந்தபட்ச செலவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US