பயங்கரமான விபத்துகுள்ளான தனியார் பேருந்து! மூவர் வைத்தியசாலையில் அனுமதி
கண்டியில் உள்ள பகுதியொன்றில் தனியார் பேருந்து ஒன்று மேல் வீதியில் இருந்து கீழ் வீதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மெத-மஹநுவர பிரதேசத்தில் இரண்டாம் வளைவு பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த அதிசொகுசு தனியார் பேருந்தே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதேவேளை குறித்த பேருந்தில் பயணித்த மூவர் படுகாயமடைந்துள்ளதாகவும், பேருந்தும் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிபில பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் சேவைப் பணிக்காக பயன்படுத்தப்பட்ட இந்த பஸ், கொழும்பு பிரதேசத்தில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட போது விபத்துக்குள்ளானதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் உடதும்பர பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் துசித தொம்பகம்மன தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.