பிரதமர் அலுவலகத்திலிருந்து ரஷ்ய தூதரகம் வரை பேரணி
கொழும்பில் பிரதமர் அலுவலகத்திலிருந்து ரஷ்ய தூதரகம் வரை கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள ரஷ்யா மற்றும் இலங்கைக்கு இடையிலான விமான போக்குவரத்தை தொடருமாறு கோரியே அவர்கள் இவ்வாறு பேரணியை முன்னெடுத்துள்ளனர்.
அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த ரஷ்ய விமானம் ஒன்றை நீதிமன்ற ஆணையின்படி, ரஷ்ய பயணிகள் விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கையின் அந்த செயற்பாட்டுக்கு ரஷ்ய அரசாங்கம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.