எரிவாயு தொடர்பில் பிரதமர் விடுத்த மகிழ்ச்சித் தகவல்!
கொழும்பில் எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் 140 இடங்களில் லிற்றோ எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 9ஆம் திகதியன்று எரிவாயு கப்பல் வரவுள்ளதாகவும், இதனையடுத்து 11ஆம் திகதி முதல் விநியோகம் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் தலா 100 கொள்கலன்கள் வீதம் 140 இடங்களில் 12.5 கிலோ எடையுள்ள ஒரு இலட்சத்து 40 ஆயிரம் எரிவாயு கொள்கலன்களை விநியோகிப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து நாளாந்தம் மொத்தமாக 25 ஆயிரம் கொள்கலன்கள் விநியோகிக்கப்படும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இந்த மாதத்தின் இறுதி அல்லது ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் எரிவாயு தட்டுப்பாடு தீர்க்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் அடுத்த நான்கு மாதங்களுக்குள் தட்டுப்பாடு இல்லாமல் சமையல் எரிவாயுவை வழங்க முடியும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.