யாழில் இருந்து திரும்புகையில் விபத்தில் சிக்கிய ஜனாதிபதி பாதுகாப்பு வாகனம்
தலாவ பகுதியில் இன்று (01) அதிகாலை ஒரு மணியளவில் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவிற்கு சொந்தமான டிஃபென்டர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (31) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கொழும்புக்குத் திரும்பும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம்
விபத்தில் காயமடைந்தவர்கள் தலாவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் சாரதி ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றுபவர் என்றும், மற்றவர்கள் இலங்கை பொலிஸில் பணிபுரியும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலாவ பொலிஸார் மெற்கொண்டு வருகின்றனர்.