போதைப்பொருள் வியாபாரிகளுக்கு ஜனாதிபதி அனுர கடும் எச்சரிக்கை!
போதைப்பொருள் வியாபாரிகள் அனைவரும் உடனடியாக சரணடைய வேண்டும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (30) கடும் எச்சரிக்கை விடுத்தார்.
சமூக ஸ்திரத்தன்மைக்காக போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தோற்கடிக்க வேண்டும் என்றும், அதற்காகத் தானும் அரசாங்கமும் எடுத்துள்ள நடவடிக்கைகள் நிச்சயமாக வெற்றி பெறும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

முழு நாடுமே ஒன்றாக தேசிய பிரச்சார திட்டம்
போதைப்பொருள் அச்சுறுத்தலை தோற்கடிப்பதற்கான "'முழு நாடுமே ஒன்றாக'" தேசிய பிரச்சார திட்டத்தை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று (30) தொடங்கி வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இளம் தலைமுறையினர் போதைப்பொருள் அச்சுறுத்தலின் மிகப்பெரிய இரையாகிவிட்டனர் என்றும், இந்த மாயாஜாலச் சூறாவளி கிராமங்கள் மற்றும் நகரங்களில் இப்போது பரவி வருவதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
அதேவேளை வடக்கிலும் போதைப்பொருள் பாவனையையும் விற்பனையையும் கட்டுப்படுத்த பொலிஸார் முடுக்கி விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.