மறைந்த கோசல நுவான் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி
தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மறைந்த கோசல நுவான் ஜெயவீரவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இறுதி அஞ்சலி செலுத்தினார்.
தல்துவ, நாபவலவில் உள்ள வீட்டிற்கு நேற்றிரவு (08) இரவு சென்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அன்னாரது பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
அப்போது, சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபெடி, தேசிய மக்கள் சக்தியின் கேகாலை பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். மறைந்த நாடாளுமன்ற உறுப்பினரின் இறுதிச் சடங்குகள் தெஹியோவிட்டவில் உள்ள எரியகொல்ல பொது மயானத்தில் இன்று (09) இடம்பெறும்.
கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜெயவீர கடந்த (6) ஆறாம் திகதி திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். 38 வயதில் கோசல நுவான் ஜெயவீர உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.