வடக்கில் கொட்டித்தீர்த்த மழை; வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள்!
வடக்கில் கொட்டித்தீர்த்த மழையால் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம், துணுக்காய் வீதியில் உதயசூரியன் கிராமம், கற்குவாரி 50 வீட்டுத்திட்டம் போன்ற கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
வட மாகாணத்திலும் புத்தளம், அநுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம், இன்று காலை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை, இன்று பிற்பகல் 01 மணி முதல் நாளை (19) பிற்பகல் 01 மணி வரையான காலப்பகுதிக்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் குறித்த பகுதி மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான மழை வீழ்ச்சி மாங்குளம் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இன்று காலை சுமார் மூன்று மணிநேரம் 91 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம், துணுக்காய் வீதியில் உதயசூரியன் கிராமம், கற்குவாரி 50 வீட்டுத்திட்டம் போன்ற கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அதேவேளை இரவு வேளையும் தொடர்ச்சியாக மழை பெய்யுமாக இருந்தால் மக்கள் இடம்பெயரவேண்டிய நிலைக்கு ஏற்படலாம் என்பதனால் தாழ்நில பகுதிகளில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.