ஹரீன் – மனுஷவுக்கு அதிர்ச்சி கொடுத்த சஜித்
கட்சியின் தீர்மானத்தை மீறி நடந்துகொண்டமைக்காக ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
மேலும் இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
ஒன்பது புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
அதன்போது ஹரின் பெர்னாண்டோ சுற்றுலா மற்றும் காணி அமைச்சராகவும் மனுஷ நாணயக்கார தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இதன்படி இவர்கள் இருவரும் கட்சியின் தீர்மானத்தை மீறி செயற்பட்டுள்ளதாக தெரிவித்து இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி இவர்களை கட்சியின் உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தியுள்ளது.