கோபுர வாசலில் பாதணிகளுடன் நடமாடிய பொலிஸார்; பக்தர்கள் கவலை
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய கோபுர வாசலில் பொலிஸார் பாதணிகளுடன் நடமாடிய விடயம் தொடர்பில் பக்தர்கள் கவலை வெளியிட்டதுடன் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கையின் வரலாற்று முக்கியத்தை பறைசாற்றும் புனித ஆலயமாக கருதப்படும் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் பாதுகாப்புக்காக வரும் பொலிஸார் பாதணிகளுடன் நடமாடியமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றினை ஒருங்கே கொண்ட இந்த ஆலயம் இராமபிரானால் வழிபட்ட ஆலயமாக வரலாற்றுப்புகழ் பெற்று திகழ்கின்றது.
இதேவேளை கடந்தகாலங்களிலும் இவ்வாறு செயற்பட்ட பொலிஸாருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு வடபகுதி அரசியல்வாதிகள் முன்னின்று செயற்பட்டுள்ளனர்.
தற்போது கொரோனா காலத்திலும் வரலாற்று சிறப்புமிக்க ஆலயத்தில் பொலிஸார் ஆலயத்தின் புனித தன்மையை மதிக்காது பாதணிகளுடன் நடமாடியமை கண்டிக்கத்தக்கது என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.