பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றினுள் திடீரென நுழைந்த பொலிஸாரால் பரபரப்பு!(Photos)
மட்டக்களப்பில் போதை பொருளை தடுப்பதற்காக விசேட நடவடிக்கையில் பாடசாலை மாணவர்களை சோதனையிடும் நடவடிக்கை இன்று சென்மைக்கல் ஆண்கள் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
இதன்போது பொலிஸார் மேப்பநாய்கள் சகிதம் மாணவர்களின் பையை சோதனையிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
போதை பொருள் பாவனை
நாட்டில் மாணவர்களுக்கிடையே போதை பொருள் பாவனை அதிகரித்துள்ளதையடுத்து அதனை தடுப்பதற்கா நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களை சோதனையிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் கிழக்கு மாகாண சிரேஷ;ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ராஜித ஸ்ரீ தமிந்த ஆலோசனைக்கமைய மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.கே.பி ஹட்டியாராச்சி தலைமையில் இன்று பாடசாலை வாசலில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதோடு ஏனைய பாடசாலைகளில் இடம்பெறும் எனவும் மாணவர்கள் பெற்றோர்கள் போதை பொருள் வியாபாரிகள் மற்றும் பாவிப்பவர்கள் தொடர்பாக அறிந்திருந்தால் உடனடியாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறியதருமாறும் போதை பொருள் வியாபரிகள் தொடர்பாக விழிப்பாகவும் இருக்குமாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கேட்டுள்ளார்.