இலங்கையில் யுக்திய நடவடிக்கையில் கைதான பொலிஸ் அதிகாரி! சிக்கிய மர்மம்
நாடாளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் யுக்திய சுற்றிவளைப்பில் கான்ஸ்டபிள் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மிஹி ஜய செவன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவரெ இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பொலிஸாரிடமிருந்து 2,140 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொழும்பு வடக்குப் குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், யுக்திய நடவடிக்கைக்கு அமைய முகத்துவாரம் பொலிஸ் பிரிவில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பொலிஸார் 27 வயதான சந்தேகநபர் வெபட - கணேபொல பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.