அதிபர் ஜெலன்ஸ்கியை கொலை செய்ய ரஷ்யா சதிதிட்டம்? உக்ரைன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை (Volodymyr Zelenskyy) கொலை செய்யும் ரஷ்ய சிறப்பு ஏஜென்சியின் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்த தகவலை உக்ரைன் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அந்த செய்தி நிறுவன டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“ ரஷ்யாவின் சிறப்பு ஏஜென்சி தலைமையிலான 25 பேர் அடங்கிய ராணுவ குழு ஸ்லோவேகியா- ஹங்கேரி எல்லையில் உக்ரைன் அதிகாரிகளால் பிடிபட்டுள்ளது.
இந்தக் குழுவின் பிரதான நோக்கம் ஜெலன்ஸ்கியை கொலை செய்வதே” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்ய போர் தொடுத்ததில் இருந்தே, ரஷ்யாவின் முதல் இலக்காக நான் தான் இருக்கிறேன் என்று ஜெலன்ஸ்கி கூறி வருகிறார்.
மேலும், ரஷ்யாவின் நாசக்கார படைகள் கீவ் நகரில் நுழைந்து இருப்பதாகவும் தன்னையும் தனது குடும்பத்தினரையும் அப்படைகள் தேடி வருவதாக் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களுக்கு விடுத்த எச்சரிக்கையின் போது குறிப்பிட்டுள்ளார்.