பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக குற்றங்களை கூற தொலைபேசி இலக்கம் அறிமுகம்!
பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகளை கூற அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
118 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அவசர இலக்கம் பொது பாதுகாப்பு அமைச்சின் ஊடாக பராமரிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தகவல் அளிப்பவரின் அடையாளத்தை அறிவிக்காமல் அந்த எண்ணின் மூலம் உரிய தகவல்களை வழங்கவும் முடியும்.
அந்த இலக்கத்தின் ஊடாக இலங்கையில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் மற்றும் நச்சு போதைப்பொருள் தொடர்பான தகவல்களையும் வழங்க முடியும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனூடாக அளிக்கும் தகவல்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.