பகிடி விபரீதமானதால் பரிதாபமாக பலியான நபர்
எகொடஉயன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீன்பிடி அலுவலக தோட்டத்திற்கு அருகில் இளைஞனால் தள்ளிவிடப்பட்ட முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் எகோட உயன பகுதியை சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான தில்மன் பீரிஸ் (71) என்ற மீனவரே உயிரிழந்தார். குறித்த நபரை 26 வயதான இளைஞன் அவரை வீதியில் வைத்து கிண்டலடித்த நிலையில் இருவருக்குமிடையில் அது தர்க்கமாக மாறியது.
இதனியடுத்து , இளைஞன் அந்த முதியவரை தள்ளி விட்டார். இதன்போது வீதியோர வாய்க்காலில் முதியவர் விழுந்தார். இதில், அவரது தலையில் பலத்த காயங்களுடன் பாணந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் சடலம் பாணந்துறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கைதான சந்தேகநபர் நேற்று மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.