நீதவானின் காரை கடத்தியவர் சிக்கினார்!
குளியாபிட்டிய நீதிவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி அமில சம்பத் ஆரியசேனவின் உத்தியோகபூர்வ காரை திருடிச் சென்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் வத்தளை ஒலியமுல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக கல்கிஸ்ஸ பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதன்போது சந்தேக நபரால் திருடப்பட்டதாக கூறப்படும் காரும் கைப்பற்றப்பட்டது.
வீடும் சோதனை
ஹோமாகம, உடுவான பகுதியில் உள்ள வீட்டுத் தொகுதியில் சந்தேக நபர் தங்கியிருந்த வீட்டையும் சோதனையிட்டனர்.
வீட்டில், இரண்டு போலி கைத்துப்பாக்கிகள், நான்குமுனைக் கத்திகள், விஷத் திரவம் அடங்கிய போத்தல் மற்றும் மிளகாய்ப் பொடி அடங்கிய பையும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
காரை ஒப்படைப்பதற்கு ஐந்து இலட்சம் ரூபா பணம் கேட்டு நீதிவானுக்கு சந்தேக நபர் விடுத்த அழைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.