பதுளையில் அதிக விலைக்கு சிமெந்து விற்பனை செய்தவருக்கு நேர்ந்த நிலை!
பதுளை மாவட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் பதுளை முத்தியங்கனை ஆலயத்தின் பின்புறம் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.
இரகசிய புலனாய்வாளரைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட சோதனையின் போது, ஒரு மூடை சீமெந்து ரூ .1150 / -க்கு விற்கப்பட்டமை தெரியவந்தது.
குறித்த லொறியில் கிட்டத்தட்ட 600 மூடை சீமெந்து இருந்ததாகவும், சோதனையின் போது கிட்டத்தட்ட 400 மூடை சீமெந்து அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் பதுளை மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபையின் புலனாய்வு அதிகாரி கூறினார்.
லொறியின் ஓட்டுநரை நுகர்வோர் விவகார அதிகார சபை விசாரணைக்காக சிமெந்து லொறியையுடன் தடுத்து வைத்துள்ளது.
லொறியின் சாரதி மீது பதுளை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.