உறங்கிக்கொண்டிருந்த இளைஞனை கொடூரமாக கொன்ற நபர்! இலங்கையில் பகீர் சம்பவம்
களுத்துறையில் இனந்தெரியாத நபரொருவர் வீடொன்றிக்குள் புகுந்து அறையில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞரின் கழுத்தில் கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் களுத்துறை பலதொட்ட வீதி, தேக்கவத்தை பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தொகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று (07-02-2023) பிற்பகல் 2.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளான 27 வயதுடைய இளைஞன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இச்சம்பவத்தில் அனுருத்த தனஞ்சய டி சில்வா எனப்படும் சந்துன் என்று அழைக்கப்படும் முச்சக்கர வண்டி சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பதுடன், களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.