மட்டக்களப்பில் இடம்பெற்ற அசம்பாவிதம்: நபரொருவர் நேர்ந்த சோக சம்பவம்!
மட்டக்களப்பில் உள்ள பகுதியொன்றில் மரத்தை வெட்டிக் கொண்டிருந்தவர் தவறுதலாக கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்றையதினம் (10-02-2023) கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்றுள்ளது.
மேலும் குறித்த சம்பவத்தில் 35 வயதுடைய தர்மலிங்கம் லக்ஸ்மன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மரக்கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தபோது குறித்த நபர் மரத்தில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.