பேருந்துளை அலங்கரிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும்! நாமல் ராஜபக்ஷ
மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாத வகையில் பேருந்துகளை அலங்கரிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ namal Rajapaksa தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (19-10-2023) பேருந்து உரிமையாளர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேருந்துகளை அலங்கரிப்பது ஒரு தனித்தொழில் அதேபோன்று ஒரு கலை எனவும் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத பட்சத்தில் பஸ்களை அலங்கரிப்பதில் பிரச்சினை இல்லை எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, போக்குவரத்து விதிகளை மீறும் சட்டங்கள் மற்றும் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் எந்த நடவடிக்கையும் அதே வழியில் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அலங்கார வேலைகளில் ஈடுபட்டுள்ள பேருந்துகளுக்கு நிவாரணம் வழங்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்திருந்தார்.