வெளிநாடொன்றில் தவிக்கும் 25 பெண்கள் நாட்டுக்கு அழைத்துவர அனுமதி!
ஓமானுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்ற நிலையில், பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகி மீட்கப்பட்ட, 115 பெண்களில் 25 பேரை நாட்டுக்கு மீள அழைத்துவர, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீட்கப்பட்ட 115 பெண்களும், தற்போது தூதரக பாதுகாப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஓமானில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறிருப்பினும், குறித்த பாதுகாப்பு இல்லங்களில், ஆகக்குறைந்த வசதியேனும் இல்லாதமையால், குறித்த பெண்கள் அங்கிருந்து தப்பிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.