வவுனியாவில் நீண்ட நேரம் காத்திருந்த மக்கள்... சஜித்துக்கான பிரச்சார கூட்டத்தில் சலசலப்பு!
வவுனியாவில் உள்ள வெளிக்குளம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான விருந்தினர் மண்டபத்தில் இன்றையதினம் (31-08-2024) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து பிரச்சார கூட்டம் ஒன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினரால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
குறித்த பிரச்சார கூட்டமானது இன்று மாலை 5 மணியளவில் ஆரம்பிக்க இருப்பதாகவும் இதைத் தொடர்ந்து 6 மணிக்கு தேர்தல் காரியாலயம் ஒன்றை பட்டானிச்சூர் பகுதியில் திறந்து வைப்பது என்றும் நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த போதும் இரவு 7 மணியை தாண்டியும் பிரச்சார மேடைக்கு விருந்தினர்கள் சமூகம் தரவில்லை.
மேலும், பிரதம விருந்தினரான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுத்தீன் இதுவரை மேடைக்கு சமூகம் தராமையால் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்படவில்லை.
குறித்த பகுதியில் நீண்ட நேரமாக காத்திருந்த மக்கள் மத்தியில் சிறு சலசலப்பு ஏற்ப்பட்டதாக தெரியவந்துள்ளது.